யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு தமிழ்ஐயா கல்விக் கழகமும் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து நடத்தும் இருநாள் சிலப்பதி கார முத்தமிழ் விழா நாளையும், நாளை மறுதினமும் காலை, மாலை அமர்வுகளாக நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டப அரங்கத்தில் இடம்பெறவுள்ளது.
காலை அமர்வு
நாளை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெறும் காலை அமர்வில் யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழக மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பர். யாழ். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கிரு பாசக்தி கருணா சிலப்பதி கார வாழ்த்து இசைப்பார். தமிழ்ச்சங்கச் செயலர் இ.சர்வேஸ்வரா வரவேற்புரையையும் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரையையும் இந்தியத் துணைத்தூதரக கொன்சியூலர் ஜெனரல் பாலச்சந்திரன் வாழ்த்துரையையும் வழங்குவர்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர் முனைவர் சு.நரேந்திரன் சிறப்புரையாற்று வார். திருவையாறு அரசர் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் செல்வகணபதி தலைமையில் சிலப்பதிகாரக் காப்பியமும் கதைமாந்தரும் என்ற தலைப்பில் மகளிர் அரங்கும் இடம்பெறும். இதில் வசந்தமாலை என்ற பொருளில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் எப்.தீபாவும் கவுந்தியடிகள் என்ற பொருளில் தமிழ்ப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் எஸ்.கற்பகமும் மாதரி என்ற பொருளில் தமிழ்ச்சங்க உபதலைவர் முனைவர் மனோன்மணி சண்முகதாசும் கருத்துரைகளை வழங்குவர்.
மாலை அமர்வு
மாலை அமர்வு நாளைமறுதினம் மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசன் தலைமையில் நடைபெறும். நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் சிலப்பதிகார வாழ்த்தை யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவன் ஜெ.மதுசிகன் இசைப்பார். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் ந.ஐங்கரன் வரவேற்புரையையும் யாழ். பல்கலைக்கழக கல்வியியற் துறைத் தலைவர் கலாநிதி ஜெ.இராசநாயகம் வாழ்த்துரையையும் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தொடக்கவுரையையும் ஆற்றுவர்.
சென்னை சுருதிலயா வித்தியாலய முதல்வர் முனைவர் பார்வதி பாலச்சந்திரன், மதுரை பாத்திமா கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் க.சரஸ்வதி ஆகியோர் பங்கேற்கும் இசையரங்கம், யாழ். கலாகேந்திரா நடனப்பள்ளி இயக்குநர் முனைவர் கிருஷாந்தி இரவீந்திராவின் நெறியாள்கையில் நாட்டிய அரங்கம் என்பனவும் இடம்பெறும்.

