நட்சத்திர வீரர் மெஸ்சிக்கு தீவிரவாத் அச்சுறுத்தல் வந்துள்ளதால் உலக கோப்பைக்கு முன் நடைபெறும் போட்டியை அர்ஜென்டினா ரத்து செய்துள்ளது.
அதனை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்துள்ளது. கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ள உலக கோப்பை தொடர், ரஷ்யாவில் வரும் 14ம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக அர்ஜென்டினா-இஸ்ரேல் அணிகள் நட்பு ரீதியான போட்டியில் மோதவுள்ளன.
இந்நிலையில் இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளிக்கிடையே நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையால் அர்ஜன்டியா அணி விளையாடக்கூடாது என பாலஸ்தீனத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. நட்சத்திர வீரர் மெஸ்சிக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் பதற்றமடைந்த அர்ஜென்டினா அணி, போட்டியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
அர்ஜென்டியாவின் இந்த அறிப்பை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்துள்ளது. உலக கோப்பை போட்டிகள் தொடங்க ஒரு வாரமே உள்ளதால் 32 அணி வீரர்களும் ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் ரஷ்யாவில் குவிந்து வருகின்றனர்.
இதனால் உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ரஷ்ய அரசு குறிப்பாக வீரர்கள் தங்கும் ஹோட்டல்களில் பல அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.