Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி : விஷம் கொடுக்கப்பட்டதாக பரபரப்பு !

April 18, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மன்சூர் அலிகான் எதிர்வரும் 19 ஆம் திகதி  நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பல பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (17) குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

மன்சூர் அலிகான் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் இன்று வியாழக்கிழமை (18) அறிக்கையொன்று விடுத்துள்ளார். அதில், 

“நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க… குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்.

மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி… உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, Treatmet குடுத்தும் வலி நிக்கல. அதிகமாக சென்னைக்கு K.M. நர்ஸிங் ஹோம் க்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக Trips குடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மன்சூர் அலிகான் தனது பிஆர்ஓ கோவிந்தராஜ் மூலம், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

Next Post

அன்னை பூபதி… ஈழ விடுதலைக்கு தவமிருக்கும் அன்னையர்களின் குறியீடு… தீபச்செல்வன்

Next Post
அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று! 

அன்னை பூபதி… ஈழ விடுதலைக்கு தவமிருக்கும் அன்னையர்களின் குறியீடு… தீபச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures