Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தொடர்ந்து சிக்கலில் சிக்கும் மகிந்த: அரச தரப்பிலிருந்து கடும் அழுத்தம்

October 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

முன்னாள் ஜனாதிபதியும்  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) தலைவருமான மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலானது ஜனாதிபதி செயலகத்திலிருந்து கடிதம் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி தங்காலையில் (Tangalle) உள்ள வீட்டில் தங்கி இருப்பதால் அவர் கொழும்பு (Colombo) வந்த பின்னர் இந்த வாகனங்கள் கையளிக்கப்படவுள்ளதாக, மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுஜன பெரமுன

இந்த விடயம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்திடம் (Sagara Kariyawasam) வினவிய போது, மகிந்த ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களால் பயன்படுத்தப்பட்ட சில வாகனங்களை ஒப்படைக்குமாறு அரசாங்கம் கடிதம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சிக்கலில் சிக்கும் மகிந்த: அரச தரப்பிலிருந்து கடும் அழுத்தம் | Government To Recover Vehicles

இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை யோசிக்காமல் இவ்வாறு செயற்படுவது தவறு என சாகர காரியவச குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் வெளியாகும் முன்னரே இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்வது பலரிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

6 மாதங்களுக்கொருமுறை சம்பள அதிகரிப்பை வழங்குவதாக கூறிய ஜே.வி.பி. இன்று அதை முற்றாக மறுக்கிறது

Next Post

மிகப் பெரிய ஆபத்து..! ரில்வின் சில்வா கருத்துக்கு விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பு

Next Post
வடக்க கிழக்கு தமிழர்களின் உண்மையான அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்துகொள்ளவில்லை

மிகப் பெரிய ஆபத்து..! ரில்வின் சில்வா கருத்துக்கு விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures