Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க.!!

August 20, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கட்சியின் பின்வரிசை உறுப்பினர் களும் சிரேஷ்ட தலைவர்கள் சிலரும் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அந்த விடயத்தில் இறுதித் தீர்மானத்தை இன்னமும் எடுக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளராக தான் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளதாக தெரிகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தல் வரும் வரையில் வேட்பாளரை அறிவிக்காதிருப்பதற்கும் அதற்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுக்கூட்டணியை அமைப்பதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சிலரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெ ள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் பொறுமை காக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் உள்ளமையினால் இந்த விடயத்தில் அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கடந்த சனிக்கிழமை அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இந் நிலையில் வேட்பாளர் நியமனம் தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படாத நிலையில் இழுபறி நிலை தொடர்ந்து வருகின்றது.

Previous Post

பிரதமருடன் ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாடல்!

Next Post

கொலைச் சம்பவம் : சந்தேக நபரொருவர் கைது, துப்பாக்கி ரவைகள், சிம் அட்டைகள் மீட்பு

Next Post

கொலைச் சம்பவம் : சந்தேக நபரொருவர் கைது, துப்பாக்கி ரவைகள், சிம் அட்டைகள் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures