திமுகவிற்கு தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கை வையுங்கள் பார்க்கலாம் என ஆதவ் அர்ஜூனா சவால் விடுத்துள்ளார்.
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று(05) மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுமபோதே அவர் மேற்கண்ட சவாலை விடுத்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
30 நாட்களாக கண்ணீர் சிந்திய விஜய்
“கரூரில் நடந்த துயர சம்பவத்தால் 9 மணி நேரமாக விஜய் அழுதார். கரூரில் உயிரிழந்த மக்களுக்காக 30 நாட்களாக கண்ணீர் சிந்தியது மட்டுமல்லாமல், அவர்கள் குடும்பத்தினரை சந்தித்தபோது ஒரு புகைப்படத்தை கூட விஜய் வெளியிடவில்லை.

மக்கள் உணர்வுகளை வைத்து அரசியல் செய்யும் கட்சியல்ல தவெக. இவ்வளவு மக்கள் கூட்டம் வரும் என உளவுத்துறைக்கு தெரியாதா? தெரியவில்லை என்றால் உள்துறை அமைச்சரை பதவி விலகச் சொல்லுங்கள்.
தைரியம் இருந்தால் கை வையுங்கள் பாக்கலாம்
சட்டமன்ற தேர்தலின்போது கறுப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களை ஆதரித்தாரே விஜய். உங்களுக்கு நன்றியே இல்லையா?
உங்களுக்கு தைரியம் இருந்தால் என் தலைவர் மீது கை வையுங்கள் பாக்கலாம். நீங்கள் அவர் வீட்டுக்கு சென்றால், ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களும் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்” என தெரிவித்தார்.

