உடனடியாக பொதுத் தேர்தலை நடாத்துமாறு கோரி ஹம்பாந்தோட்டை – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சட்டத்தரணிகள் சங்கம் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
ஹம்பாந்தோட்டை கபடா சந்திக்கு அருகில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹம்பாந்தோட்டை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த இடத்தில் ஹம்பாந்தோட்டை மாநகர சபை உறுப்பினர்கள் குழுவொன்று தற்போதைய நிலையில் , சத்தியாகிரக போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

