ஐக்கியதேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கமொன்று அடுத்த வாரம் உருவாக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தேசிய அரசாங்கமொன்றை நிர்மாணிப்பதற்கு விருப்பம் தெரிவித்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திசநாயக்கவுக்கு ஐக்கியதேசியக் கட்சி நேற்றைய தினம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
நல்லாட்சி அரசுக்கான கொள்கைகளுடன் பல்வேறு கட்சிகளைக் கொண்ட தேசிய அரசாங்கமொன்றை ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கவிருப்பதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு விரும்பும் எந்தக் கட்சிக்கும் ஐக்கியதேசியக் கட்சி இடமளிக்கத் தயாராகவிருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி தலைவர்களில் ஒருவரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை,தேசிய அரசாங்கத்தில் இணையும் கட்சிகள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படுமெனவும், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

