கொழும்பில் தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேலுவன வீதி பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இளைஞன் உட்படஇருவர் நேற்று திங்கட்கிழமை (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் விசாரணை பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துப்பாக்கியை தம்வசம் வைத்திருக்க உதவி செய்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் தெமட்டகொடை பகுதியில் வசிக்கும் 24 மற்றும் 42 வயதுடையவர்கள் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் விசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.