Friday, September 5, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

February 18, 2018
in News, Politics, Uncategorized, World
0

கிளிநொச்சியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர் தனது வாக்குமூலங்களில் முரண்பட்ட தகவல்களை வழங்கியுள்ளமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 8 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. அதில் பளையைச் சேர்ந்த சி.சுரேந்திரன் என்பவர் காயமடைந்தார். அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்குவைத்து அவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற இடம் பளை என்றும் பின்னரான வாக்குமூலத்தில் கிளிநொச்சி முறிப்புக் குளத்தடியில்தான் சம்பவம் இடம்பெற்றது என்றும் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதனால் விசாரணையைப் பளை பொலிஸார் கிளிநொச்சிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவரது வாக்குமூலங்களில் முரண்பட்ட தகவல்களை வழங்கியமைக்கான காரணம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2 பேர் சில நாள்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் கணவன் மனைவி என்று கூறப்பட்டது. குறித்த சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதின்றில் அடையாள அணிவகுப்புக்கு முற்படுத்தப்பட்டனர்.

காயமடைந்தவரின் அடையாளப்படுத்தலின்படி குறித்த இரண்டு பேரும் கைது 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous Post

7 தின்களின் பின் சடலமாக மீட்கப்பட்ட மிருசுவில் வாசி !!

Next Post

அரசு உருப்­ப­டி­யாக எதை­யும் செய்­ய­வில்லை : எம்.ஏ.சுமந்­தி­ரன்

Next Post

அரசு உருப்­ப­டி­யாக எதை­யும் செய்­ய­வில்லை : எம்.ஏ.சுமந்­தி­ரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures