கல்முனை- மருதமுனைப் பிரதேசத்தில் தீவிரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் உருவப் படம் பொறிக்கப்பட்ட போதனைப் புத்தகமொன்று மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகத்துக்கிடமான இறுவட்டுகள், சிம் அட்டைகள் இரண்டுடனான தொலைபேசி என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்று இரவு 8.45 மணியளவில் கல்முனை பொலிஸ் விசேட படையணியால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.