அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்த எதிரிகளும் இல்லை, நிரந்தர நலன்கள் தான் நிலைநிறுத்தபடும் என்ற விடயம் வொசிங்டன் அரசியல் அரங்கில் மட்டுமல்ல யாழ்ப்பாண அரசியல் அரங்கிலும் தெரிகின்றது.
இலங்கையை பொறுத்தவரை எதிர்வரும் நாட்களில் இதுவரை ஆட்சியமைக்கப்படாத உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்கபபடவேண்டும் என்பதால் பகிரங்கப்பட்டது பாதி, திரைக்குப் பின்னால் மீதி என்ற வகையில் டீல்களும் புதிய தில்லாலங்கடிக் கூட்டணிகளும் தீவிரப்படுகின்றன.
இதனால் எதிர்வரும் நாட்களில் தமிழரசியல் பரப்பிலும் ஆச்சரியங்கள் காத்துள்ளன.
ஏகேடியை சுற்றிய மர்ம கொள்கலன்கள், தமிழரசு- ஈபிடிபி ஹனிமூன், தமிழ் கட்சிகளின் திரைக்கு பின்னால் நடக்கும் சூழ்ச்சி சதித்திட்டங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் “செய்தி வீச்சு”