மட்டக்களப்பு – திருப்பெருந்துறை குப்பை மேட்டில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீ பரவியுள்ளது.
அந்தப் பகுதி மக்கள் பொலிஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளையும் மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை இந்தக் குப்பைமேட்டில் ஏற்கனவே ஒரு தடவை தீவிபத்து ஏற்பட்டது. அதைப் பூரணமாக அணைக்க இருவாரம் எடுத்தது.

