Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருகோணமலை வீதியில் பாரவூர்தி வீதியை விட்டு விலகி விபத்து சாரதி பலி!

June 3, 2020
in News, Politics, World
0

திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதி, வில்கம் விகாரை பகுதியில் இன்று (03) காலை பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் சாரதி பலியாகியுள்ளார்.

பாரவூர்தியின் சாரதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாரவூர்தி , அநுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக பயணித்துக்கொண்டிருந்த போது, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், 33 வயதான கண்டி-கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சந்துன் விக்ரமசிங்க என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

பாடசாலைகளின் கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கு ஶ்ரீலங்கா கிரிக்கெட்டினால் நிதியுதவி வழங்கல்

Next Post

உணவு ஒவ்வாமையால் 30 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Next Post

உணவு ஒவ்வாமையால் 30 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures