ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தனது தனிப்பட்ட துப்பாக்கி பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் சென்ற சம்பவம் தொடர்பாக கடந்த டிசம்பர் 26ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டார்.
இந்தக் கைது, EPDP மீதான பழைய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது, அரச படைகளுடன் இணைந்து செயற்பட்ட EPDP, கொலைகள், கடத்தல்கள்,பணம் பறித்தல், குழந்தை கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக Human Rights Watch மற்றும், Amnesty International போன்ற அமைப்புகளும், அமெரிக்க அரசின் மனித உரிமை அறிக்கைகளும் குற்றம்சாட்டியுள்ளன.
குறிப்பாக, படுகொலைகள், தொடர்பில் சில ஆவணங்களிலும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் கிழக்கிலும் EPDP தரப்பு சார்ந்த குற்றங்களின் கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி…
