தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (15) நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது.
திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்தில் அனுஷ்டிக்கபட்டது.
இதன் போது சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.





