தினமும் மூன்று லீற்றருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடுமையான வெப்பமான கால நிலை நிலவி வருவதனால் , உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும். அதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.
தினமும் 3 லீற்றர் வரையில் நீர் அருந்துங்கள். அத்துடன், போதியளவு நீராகாரங்கள் அருந்துங்கள். நீர் தன்மையுள்ள வெள்ளரிப் பழம் போன்றவற்றை உண்ணுங்கள் என வைத்தியர் யமுனாநந்தா தெரிவித்தார்.