Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திட்டமிட்ட மின்வெட்டு அட்டவணையில் மாற்றம்

February 21, 2022
in News, Sri Lanka News
0
கல்முனையில் முன்னறிவித்தலின்றி மின்சாரத்தைத் துண்டிப்பு: மக்கள் மக்கள் அசௌகரிகம்

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் போது மின்சாரம் தடைபடுவதைத் தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது.

இன்று காலை 08.30 – 11.30 மற்றும் பிற்பகல் 01.30 – மாலை 04.30 வரை பரீட்சை இடம்பெறும் வேளையில் மின்சாரம் தடைபடுவதைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

எவ்வாறெனினும் இன்று மாலை 04.00 முதல் இரவு 10.00 மணி வரை மின்சாரம் தடைப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.

முன்னதாக, மின்சார சபையின் கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளின் கீழ் இன்று (21) முதல் திட்டமிட்ட மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரையில் தென் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளுக்கும் சுழற்சி அடிப்படையில் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியது.

அதேநேரம் தென் மாகாணத்தில் காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையான காலப் பகுதியில் சுழற்சி முறையில் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் ஆணைக்குழு கூறியிருந்தது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள மின் தடை குறித்த தகவல்களைப் பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.pucsl.gov.lk/ ஐப் பார்வையிடலாம்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கருத்துச்சித்திரம்

Next Post

கிளிநொச்சியில் 650 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிப்பு

Next Post
கிளிநொச்சியில் 650 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிப்பு

கிளிநொச்சியில் 650 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures