Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தலைமன்னாரில் 10 வயது சிறுமி கொலை | சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

December 27, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தலைமன்னாரில் 10 வயது சிறுமி கொலை | சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயது நபரை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டது

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்ற இந்த நபர் கடந்த 15ஆம் திகதி திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தலைமன்னார் பொலிஸார் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளின் பின்னர், கடந்த திங்கட்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 26ஆம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த நபர் இன்றையதினம் வியாழக்கிழமை (26) மீண்டும் விசாரணைக்கு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவ்வேளை விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி மாலை காணாமல் போன அக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது அம்மம்மாவின் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள தென்னந்தோப்பில் இருந்து மறுநாள் 16ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.

அதனையடுத்து, பிரேத பரிசோதனையின்போது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

அதன் பின்னர், வெளி மாவட்டத்தில் இருந்து சென்று குறித்த தென்னந்தோப்பில் வேலை செய்துவந்த 55 வயதுடைய நபர் இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றதை தொடர்ந்து, கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சுனாமி ஆழிப் பேரலையில் சிக்கி உயிரிழந்த கள்ளப்பாடு பாடசாலை மாணவர்களுக்கு நினைவஞ்சலி

Next Post

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

Next Post
மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures