Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தற்போதைய ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு! மீண்டும் முடங்குமா நாடு

September 10, 2021
in News, Sri Lanka News
0
மலேசியா  நாளை முதல் முடக்கம்

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தினால் கோவிட் தொற்று குறைவடையவில்லை. மாறாக நடுத்தர மக்களே பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய நாட்டை முழுமையாக முடக்காமல் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துவது பயனற்றது. ஒரு வாரகாலமாவது அறிவியல்பூர்வமாக நாட்டை முடக்கியிருந்தால் சிறந்த பெறுபேற்றை பெற்றிருக்க முடியும்.

அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கோவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

வைரஸ் போன்ற அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காகவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செயற்படுத்தப்படும் போது மக்கள் வீதியில் நடமாடுவது முற்றாக தடை செய்யப்படும்.

அத்துடன் ஒருவருக்கொருவரான தொடர்பு தடை செய்யப்படும். அத்துடன் நாட்டை முழுமையாக முடக்கி கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறான வழிமுறைகளுக்கு அமையவே பெரும்பாலான நாடுகள் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்தி சாதகமான பயனை பெற்றுக் கொண்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

 http://Facebook page / easy 24 news
Previous Post

களவாடிய பொழுதுகள்: கேசுதன் கவிதை

Next Post

செப்டெம்பர் 21இற்கு பின் நாட்டை திறக்கலாமா? கோத்தபாய பிறப்பித்துள்ள உத்தரவு

Next Post
சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை

செப்டெம்பர் 21இற்கு பின் நாட்டை திறக்கலாமா? கோத்தபாய பிறப்பித்துள்ள உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures