Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தற்போதைய இனவிகிதாசார புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பேசக் கூடாது! – சம்பந்தன்

August 22, 2017
in News
0
தற்போதைய இனவிகிதாசார புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பேசக் கூடாது! – சம்பந்தன்

யுத்தம் ஏற்படுவதற்கு முன்னர் இருந்த விகிதாசாரங்களே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்றுக் காலை அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்றது.

பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப் , இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபிக், க.துரைரெட்ணசிங்கம், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். எதிர்கட்சித் தலைவர் மேலும் இங்கு தெரிவித்ததாவது:

இன விகிதாசாரங்களை கணிப்பிடும்போது நாட்டில் அமைதிச் சூழல் நிலவிய காலத்தில் உள்ள விகிதாசாரங்களையே கணிப்பிட வேண்டும். யுத்தத்தால் நாட்டை விட்டு பலர் வெளியேறியுள்ளனர். மக்கள் வெளியேறுவதற்கு முன்,இருந்த விகிதாசாரமே கருத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக இருக்கக் கூடும். இவ்வாண்டில் பல தேர்தல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் அரைவாசி காலம் இவ்வாண்டுடன் முடிவடையவுள்ளது. எனவே அபிவிருத்திப் பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டிய தருவாயில் நாம் உள்ளோம்.

திருகோணமலை மாவட்டத்தின் 1983ஆம் ஆண்டு இன விகிதாசாரப்படி, தமிழர்கள்-42 சதவீதமும் முஸ்லிம்கள்-; 32 சதவீதமும், சிங்களவர்கள்-26 சதவீதமாகவும் இருந்துள்ளனர். இந்த நிலையில் நாட்டில் எற்பட்ட யுத்தத்தின் காரணமாக திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள். இவர்கள் முழுமையாக வந்து சேரவில்லை. இது போல ஐரோப்பிய நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் சிலர் தஞ்சம்புகுந்துள்ளனர் .இவர்களும் நாட்டிற்கு முழுமையாக வந்து சேரவில்லை. இந்த நிலையிலே இன்று புள்ளி விபரம் மாறியுள்ளது. எனவே தற்போதைய நிலையை மட்டும் வைத்துக் கொண்டு புள்ளி விபரங்கள் பற்றிப் பேசக் கூடாது என்றார்.

Previous Post

ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மதகுருமார்களுக்கு இலவச மருத்துவ சேவை

Next Post

ஆரவ் மீது பிக் பாஸ் எடுத்த அதிரடி முடிவு : இடையில் நடந்தது என்ன?

Next Post
ஆரவ் மீது பிக் பாஸ் எடுத்த அதிரடி முடிவு : இடையில் நடந்தது என்ன?

ஆரவ் மீது பிக் பாஸ் எடுத்த அதிரடி முடிவு : இடையில் நடந்தது என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures