Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்க்க வேண்டும்! – சம்பந்தன்

March 20, 2018
in News, Politics, World
0

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் ஜனாதிபதிக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால் இந்த விடயத்தில் அவருக்கு இருக்கின்ற சவால்களை சமாளித்து தமிழ்மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்க்கட்சி தலைவா் இரா.சம்பந்தன் தெரிவித்தாா்.

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இதனை தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தனிநாட்டைக் கேட்கவில்லை தங்களது பிரச்சினையை தனிநாட்டுக்குள் பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குளே தீர்க்கவே தமிழ் மக்கள் விரும்பகின்றனர்.ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. நாட்டை இப்படியே கொண்டு செல்ல முடியாது. நாடு மிகப்பெரிய துன்பங்களையும் பொருளாதார பின்னடைவையும் சந்தித்துள்ளது. இலங்கையை விட பின்தங்கியிருந்த பல நாடுகள் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது.

உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்காது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது. இந்த நிலையில் ஜனாதிபதி தான் எதிர்கொள்கின்ற சவால்களில் இருந்து மேலெழ வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால் இந்த விடயத்தில் அவருக்கு இருக்கின்ற சவால்களை சமாளித்து தமிழ்மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு ஜனாதிபதி செய்வாராக இருந்தால் சர்வதேச சமூகம் அவரை உள்நாட்டில் பிரச்சினைகளை தீர்த்த தலைவர் என்று அங்கீகரிக்கும். எனவே காலதாமதம் இன்றி ஜனாதிபதி தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Previous Post

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் வியாழக்கிழமை பாகிஸ்தானுக்கு செல்கின்றார்

Next Post

உத்தரபிரதேசத்தில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்: முதல்-மந்திரி அறிவிப்பு

Next Post

உத்தரபிரதேசத்தில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்: முதல்-மந்திரி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures