விஜயகாந்தின் பிரமாண்ட படங்களை தயாரித்த நிறுவனம் ராவுத்தர் பிலிம்ஸ். அதன் உரிமையாளர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தார் விஜயகாந்தின் நெருங்கி நண்பர். பல ஆண்டுகளாக படத் தயாரிப்பதில் இருந்து விலகி இருந்த ராவுத்தர் பிலிம்ஸ், தற்போது மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கி உள்ளது. ராவுத்தர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமாகி விட்டதால் அவரது மகன் முகமது அபூபக்கர் தயாரிப்பாளராகி தயாரிக்கும் படம், எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.
அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் இலங்கையை சேர்ந்த முன்னணி மாடல் அழகியான சாஷ்வி பாலா ஹீரோயினாக அறிமுகமாகிறார். நெடுஞ்சாலை ஆரி ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் தவிர நான் கடவுள் ராஜேந்திரன் பகவதி பெருமாள் மற்றும் நாகேஷ் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். கார்த்திக் ஆச்சார்யா இசை அமைக்கிறார், ஜே.லக்ஷ்மண் ஒளிப்பதிவு செய்கிறார்.