அண்மைய நாட்களாக தமிழ் அரசியல் களம் என்பது பாரிய விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது.
இதற்கு உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையிலான புதிய கூட்டணிகள் காரணமாக அமைந்துள்ளது.
காரணம், மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வந்த கட்சிகள் தற்போது தங்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காக கூட்டணியை அமைக்க ஒன்றிணைந்துள்ளன.
இந்தநிலையில், குறித்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களுக்கு அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையையும் கேள்விகுறி ஆக்கியுள்ளது.
இது தொடர்பிலும் கட்சிகளின் புதிய கூட்டணி தொடர்பிலும், தமிழ் அரசியல் களம் குறித்தும், தமிழ் அரசியல் கட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்த விரிவான கரு்ததுக்களுடன் வருகின்றது இன்றைய சக்கரவியூகம் நிகழ்ச்சி,