Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ் அமைப்புக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

March 22, 2019
in News, Politics, World
0

முள்ளிவாய்க்கால் பேரவலம் தந்ததை விடவும் இப்போது அதிக வலியை உணர்கின்றோம். முள்வேலி முகாம் தந்த அவலங்களை விடவும் இப்போது அதிக அச்சத்திற்குள்ளாகியுள்ளோம். இறுதி யுத்தம் இத்தனை அவலங்களைத் தந்தபோதும் எங்களது மக்கள் புலம்பெயர்ந்து வாழும் எங்கள்மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

தமிழீழப் போர்க் களம் சிதைக்கப்பட்டு விட்டாலும், புலம்பெயர் தமிழ் உறவுகள் சிங்கள இனவாதத்திடமிருந்து தங்களை மீட்பார்கள் என்ற எதிர்காலக் கனவுடன் காத்திருந்தார்கள்.

ஆனால், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உருவாகி விஸ்வரூபம் எடுத்துள்ள தலைமைப் போட்டி, தாயகக் கனவுகளைப் பின் தள்ளிவிட்டன.

சிங்கள தேசத்தால் சிறை பிடிக்கப்பட்டு, உயிர்ப் பாதுகாப்பற்ற வாழ்வையே விதியாகக் கொண்ட தமிழ் மக்களது உளவுரணைப் புலம்பெயர் களத்தில் உங்களால் மேற்கொள்ளப்படும் போட்டிகள் சிதைத்து வருகின்றன.

அடிமை வாழ்வுக்குள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைப் புலம்பெயர் தமிழ்த் தலைமைப் போட்டியாளர்கள் உருவாக்கியதைத் தவிர வேறெதனையும் சாதித்ததாக உணர்ந்து கொள்ள முடியவில்லை.

உங்கள் தலைமைப் போட்டி அரசியலுக்குள் தமிழீழம் சிதைக்கப்படுவதை இனியும் பார்வையாளர்களாக இருந்து சகித்துக்கொள்ள முடியாது.

தேசத்தை மீட்பதற்காகப் போராட வேண்டிய தமிழ் மக்களாகிய எங்களை இனியும் நீங்கள் உங்கள் கோஷங்களுக்குள் அலைக்களிப்பதை அனுமதிக்க முடியாது. தமிழீழ விடுதலைக்கான புலம்பெயர் போர்க் களம் சிதறடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

இதுவரை காலமும் உயிர்களை விலையாகச் செலுத்தி, உருவாக்கிய தமிழ்த் தேசிய விடுதலைத் தளங்கள் சுயலாபங்களுக்காக விலையாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

எனவே, உங்களுக்குள் உருவாகி கோர வடிவெடுத்திருக்கும் தலைமைப் போட்டியைப் புறம்தள்ளிவிட்டு, களத்தில் இணைந்து பணியாற்ற அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்ற எங்களது இறுதி வேண்டுகோளை உதாசீனம் செய்ய வேண்டாம் என்று இந்தத் தருணத்தில் இறுகிய மனத்துடன் நிபந்தனையாக உங்கள் முன் வைக்கின்றோம். “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் “

Previous Post

நச்சுத்தன்மையற்ற தேசிய காய்கறி சந்தை , கண்காட்சி

Next Post

இளையராஜாவை ஆதரிக்க திலீப் வேண்டுகோள்

Next Post

இளையராஜாவை ஆதரிக்க திலீப் வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures