Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழர்களின் பொருளாதார முன்னேற்றமே தைப்பொங்கல் : நிமால் விநாயகமூர்த்தி

January 14, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழர்களின் பொருளாதார முன்னேற்றமே தைப்பொங்கல் : நிமால் விநாயகமூர்த்தி

தமிழர்களின் முன்னேற்றமே தைப்பொங்கல் வலியுறுத்துகின்ற முக்கிய செய்தி என அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி (Nimal Vinayagamoorthy) தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நிகழ்வை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் மக்களின் பண்பாட்டுப் பண்டிகைகளில் ஒன்றான பொங்கல், பண்டைய காலம் தொட்டு எமது மரபோடும் வரலாற்றோடும் கலந்த அற்புதமான பண்டிகையாகும்.

தமிழர் பண்பாடு

இயற்கையை வழிபடும், விலங்கள்மீது காருண்யத்தை வெளிப்படுத்தும், உழைப்பை மதிக்கும் தைப்பொங்கல் தமிழர்களின் சிறந்த பண்பாடாகவும் அறிவு வெளிப்பாடாகவும் உள்ளது.

தமிழர்களின் பொருளாதார முன்னேற்றமே தைப்பொங்கல் : நிமால் விநாயகமூர்த்தி | Nimal Vinayakamurthy Pongal Greetings

தமிழர்களின் தொன்மையான வாழ்வில் இருந்து இன்றுவரை முக்கிய பொருளாதாரமாக இருக்கும் நெல் உற்பத்தியின், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் இயக்கத்தையும் தைப்பொங்கல் உணர்த்துகிறது.

இதன் வழியாக தமிழர்கள் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பெரும் செய்தி தைப்பொங்கலில் வலியுறுத்தப்படுகின்றது.

தமிழர் பண்பாட்டின் வலிமை

இதேவேளை இன்றைய உலகம் பாரிய மாற்றங்களையும் விளைவுகளையும் கண்டுள்ளபோதும், கனடா போன்ற நாடுகள் தமிழ் மரபுத் திங்களை அங்கீகரித்துள்ளமை வாயிலாக தமிழர் பண்பாட்டின் வலிமையும் நாடு கடந்து அது நிலைபெற்றிருப்பதையும் நாம் உணர முடியும்.

தமிழர்களின் பொருளாதார முன்னேற்றமே தைப்பொங்கல் : நிமால் விநாயகமூர்த்தி | Nimal Vinayakamurthy Pongal Greetings

இனப்படுகொலைப் போரினால் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ள எமது மக்கள் நம்பிக்கையுடன் மீண்டெழவும் நீதி மற்றும் விடுதலையைப் பெறவும் இந்த நாள் புதிய நம்பிக்கையையும் விடியலையும் ஏற்படுத்த வேண்டும் என்று இயற்கையை வேண்டி வாழ்த்துகிறேன்…”  என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Previous Post

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நாள் வாழ்த்துகள்!

Next Post

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவிப்பு

Next Post
அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவிப்பு

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை - நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures