Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழக மீனவர்கள் 8 பேரை தாக்கி ரூ.2 லட்சம் பொருட்கள் கொள்ளை | இலங்கை கடற்பரப்பிலிருந்து வந்தவர்கள் மீண்டும் அத்துமீறல்

November 6, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
தமிழக மீனவர்கள் 8 பேரை தாக்கி ரூ.2 லட்சம் பொருட்கள் கொள்ளை | இலங்கை கடற்பரப்பிலிருந்து வந்தவர்கள் மீண்டும் அத்துமீறல்

நாகப்பட்டினம்: இலங்கை கடற்பரப்பிலிருந்து வந்தவர்கள்இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்கள் 8 பேரைத் தாக்கி ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (38). ஃபைபர் படகு உரிமையாளர். இவர்சக மீனவர்களுடன் கோடியக்கரையில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மதன் (20) சிவக்குமார் (50இ நித்திக்குமார் (16) ஆகியோரும் நேற்று முன்தினம் மதியம் கோடியக்கரைக்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை ஒரு படகில் வந்த கடல்கொள்ளையர்கள் செந்தில்குமார் படகில் ஏறி மீனவர்களைக் கட்டையால் தாக்கி ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

பின்னர் மீனவர்கள் 4 பேரும் கரைக்குத் திரும்பினர். காயமடைந்த செந்தில்குமார் மதன்இ சிவக்குமார் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதேபோல நாகை மாவட்டம் வானவன்மகாதேவி மீனவர்காலனியைச் சேர்ந்த சிதம்பரம் (60) தனது ஃபைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (30) முகுந்தன் (18)கிருஷ்ணசாமி (65) ஆகியோருடன் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு கிழக்கே 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த கடல் கொள்ளையர்கள் மீனவர்கள் 4 பேரையும் தாக்கி 200 கிலோ வலைஜிபிஎஸ் கருவி மற்றும் 60 கிலோ மீன்கள் என ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

பின்னர் மீனவர்கள் நேற்று காலை வானவன்மகாதேவி கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். இதுகுறித்து கீழையூர் கடலோரக் காவல் படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இலங்கை கடற்பரப்பிலிருந்து வந்தவர்களின் அத்துமீறல்கள் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

யாழில் வீடொன்றில் 135 பவுண் நகைகள் திருட்டு

Next Post

இஸ்ரேல் பிரதமர் பதவி விலகவேண்டும் | ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

Next Post
இஸ்ரேல் பிரதமர் பதவி விலகவேண்டும் | ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் பிரதமர் பதவி விலகவேண்டும் | ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures