Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தபால் மூல வாக்குப்பதிவின் இரண்டாவது நாள்

November 1, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இரண்டாவது நாளாக இன்று   ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவின் முதல் நாள்  நேற்று, மிகவும் அமைதியான முறையில் நடந்துமுடிந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே இன்று இரண்டாவது நாள் தபால் மூல வாக்குப்பதிவு, பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட தபால் வாக்காளர்கள் இன்றும் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தபால் வாக்காளர்களின் தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும்  04ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 07ஆம் திகதி வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் மூல வாக்குப்பதிவினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

முதல்நாள் தபால் மூல வாக்களிப்பு – கெபே முக்கிய அறிவிப்பு

Next Post

சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்திய 162 பேர்

Next Post

சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்திய 162 பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures