Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தந்தையை அடித்து கொன்ற மகன் | அதிர்ச்சியை தரும் சம்பவம்

February 5, 2022
in News, Sri Lanka News
0
தந்தையை அடித்து கொன்ற மகன் | அதிர்ச்சியை தரும் சம்பவம்

நுவரெலியா – இராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த தந்தையின் சடலத்தினை இராகலை பொலிஸார் இன்று (05) காலை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 62 வயதான  ஒரு பிள்ளையின் தந்தையான சுப்பிரமணியம் செல்வநாயகம் எனவும் இராகலை டெல்மார் மேல் பிரிவைச் சேர்ந்தவர் என கண்டரியப்பட்டுள்ளது.

நேற்று இரவு தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் மகன் தந்தையினை இரும்பு ஒன்றினால் தாக்கியுள்ளார் தாக்குதலுக்கு இலக்கான தந்தையின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதையடுத்து அதிக இரத்த போக்கு காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த  நீதவானின் விசாரணைக்கு பின் சடலத்தை சட்டவைத்தியர் ஊடாக பிரேத பரிசோதணைக்கு உட்படுத்த  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகனை கைது செய்துள்ள  இராகலை பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்

மேலும் இந்த  தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இராகலை பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதியப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பாதுகாப்பாக உணவை உட்கொள்ள மூக்கை மட்டும் மறைக்கும் புதிய முகக்கவசம்

Next Post

சீனாவில் ஆரம்பமாகியது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்

Next Post
‘பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிக்க வலுவாக செயற்படுங்கள்’ | சமூக ஆர்வலர்கள்

சீனாவில் ஆரம்பமாகியது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures