தந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது சிறுமி பரிதாபமாக பலி
வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச சின்னத்தம்பனை பகுதியில் தந்தையின் வாகனத்தில் மோதி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் உள்ள சுகந்தன் என்பவர் நேற்றைய தினம்(09.05.2018) காலை தனது ஐந்து வயது மகளான துசாந்தினி என்பவரை முன்பள்ளி பாடசாலைக்கு தனது ஹயஸ் ரக வாகனத்தில் ஏற்றி சென்று இறக்கி விட்டு தனது வாகனத்தை முன்நோக்கி நகர்த்திய பொழுது சிறுமி வாகனத்தின் முன்பக்கமாக கடப்பதை அவதானிக்காத தந்தை சிறுமி மீது வாகனத்தை மோதியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இக்குடும்பத்தில் ஒரேயொரு பிள்ளையென அறியமுடிகிறது.