Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை பேசும் ‘மெட்ராஸ் மேட்னி’!

May 31, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை பேசும் ‘மெட்ராஸ் மேட்னி’!

‘குடும்பத்தின் மேன்மைக்காக அயராது உழைக்கும் தந்தைக்கும், அவருடைய மகனுக்கும் இடையேயான உறவு சார்ந்த இடைவெளியை உணர்வுபூர்வமாக விவரிப்பது தான் மெட்ராஸ் மேட்னி’ என அப்படத்தின் இயக்குநரான கார்த்திகேயன் மணி தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன் , ஷெல்லி, விஷ்வா, ஜோர்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா, சாம்ஸ் , கீதா கைலாசம்,  ரமேஷ் திலக்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார்.  மத்திய தர வர்க்கத்து மக்களின் வாழ்வியலை பேசும் இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்குபற்றினர்.

படத்தின் இயக்குநர் பேசுகையில், ” தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினாலும்.. சினிமா மீது குறையாத பற்று இருந்தது. இதன் காரணமாக சினிமா பற்றிய விடயங்களை தன்னெழுச்சியாக கற்றுக் கொண்டேன். மேலும் எம்முடைய தாயாரின் தமிழ் மொழி வரலாறு மற்றும் தமிழர்களின் வரலாறு குறித்த அறிவு பகிர்தலால் இப்படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன். நான் சந்தித்த.. கேட்ட.. அனுபவங்களை வைத்துத்தான் இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறேன். குடும்பத்தை உருவாக்கும் தலைவர் குடும்பத்தின் மேன்மைக்காக ஓயாது ஓடி ஓடி உழைக்கிறார் . அவர் திரும்பி பார்க்கும் போது அவருடைய வாரிசிற்கும் , அவருக்கும் இடையே உறவு மேலாண்மையிலும், புரிதலிலும் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது.  இதன் காரணமாக தந்தைக்கு ஏற்படும் மன வலியை விவரிப்பது தான் இப்படத்தின் திரைக்கதை. இப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிகர் காளி வெங்கட் முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பை வழங்கி உள்ளார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

Previous Post

சீரற்ற காலநிலையால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டன

Next Post

கனடாவில் கைதான தமிழரின் அநாகரிக செயல் : சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள்

Next Post
கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள்

கனடாவில் கைதான தமிழரின் அநாகரிக செயல் : சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures