குழந்தை பெற்றுக் கொண்டு ஓராண்டுக்கும் மேலாக ஓய்வெடுத்து வந்த அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் சமீபத்தில் தனது டென்னிஸ் பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார்.
பிஎன்பி பாரிபா ஓபன் 3வது சுற்றில் சகோதரி வீனஸ் வில்லியம்சிடம் தோற்ற அவர், அடுத்து மயாமி ஓபனில் இந்த வாரம் களமிறங்கத் தயாராகி வருகிறார்.
மகள் ஒலிம்பியா அலெக்சிசுடன் உள்ள புகைப்படத்தை நேற்று ட்வீட் செய்துள்ள செரீனா, ‘ஒலிம்பியா சரியான குறும்புக்காரி… அவளைத் தூங்கவைத்து விட்டு பயிற்சிக்கு போகலாம் என நினைத்தால், தூங்காமல் விளையாடிக் கொண்டே இருக்கிறாள்’ என்று தகவல் பதிந்துள்ளார்.
பிஎன்பி பாரிபா ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் மயாமி ஓபன் முதல் சுற்றில் செரீனா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.