Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டைனமெட் வெடி மருந்து வெடித்ததில் ஒருவர் பலி

June 9, 2020
in News, Politics, World
0

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோரப் பகுதியில் டைனமெட் வெடி மருந்து வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று மதியம் 1.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

மீன் பிடிக்காக டைனமட் வெடி தயார் செய்யும் போது வெடித்து சிதறியதில் டைனமைட் தயார் செய்தவர் உட்பட இருவர் படுகாயமடைந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.

இவ்வாறு வெடிப்பு சம்பவத்தின் போது கிண்ணியா இடிமன் -5,கிண்ணியா பகுதியை சேர்ந்த 35 வயதுடைய செயினுலாப்தீன் நவாஸ் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார் எனவும்,மற்றொருவர் கிண்ணியா, பெரியாற்றுமுனையை சேர்ந்த ஜௌபர் ரிசான் வயது (26) உடைய குடும்பஸ்தர் படுகாயமடைந்தவர் எனவும் தெரியவருகிறது.

படுகாயமடைந்த ரிசான் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

தேசிய மருத்துவமனை கொள்ளை; வைத்தியர் பிடிபட்டார்

Next Post

த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்

Next Post

த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures