Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

டேன் பிரியசாத் படுகொலையின் நோக்கத்தை அம்பலப்படுத்திய மொட்டுக் கட்சி!!

April 24, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
டேன் பிரியசாத் படுகொலையின் நோக்கத்தை அம்பலப்படுத்திய மொட்டுக் கட்சி!!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் ஆர்வலருமான டேன் பிரியசாத்தின் கொலையானது அரசியல் நோக்கம் கொண்ட கொலை என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

மீதொட்டமுல்ல வார்டில் இருந்து கொலன்னாவ நகராட்சி மன்றத்திற்குப் போட்டியிட்ட பிரியசாத், பல ஆண்டுகளாக ஒரு சிங்கள-பௌத்த ஆர்வலராகவும், ஒரு முக்கிய சமூகப் பிரமுகராகவும் இருந்தார் என கமகே குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, படுகொலை அவரது வெளிப்படையான அரசியல் கருத்துக்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சட்டத்தரணி மனோஜ் கமகே கூறியுள்ளார்.

சட்டத்தின் ஆட்சி

இந்த நிலையில், மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள் அதிகளவில் குறிவைக்கப்படுகிறார்கள் என்பது தற்போது தெளிவாகியுள்ளதாகவும் பிரியசாத்தின் அரசியல் நிலைப்பாடு அவரது மரணத்திற்கு வழிவகுத்ததா என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

டேன் பிரியசாத் படுகொலையின் நோக்கத்தை அம்பலப்படுத்திய மொட்டுக் கட்சி!! | Dan Priyasad Murder Slpp Revealed Details

அத்தோடு, நாட்டில் தினசரி கொலைகள் அதிகரித்து வருவதாகவும், சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்ததே இதற்குக் காரணம் என்றும் கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

1980களின் பிற்பகுதியில் நடந்த அரசியல் வன்முறைக்கு இணையாக, பிரேமதாசா காலத்தில் காணப்பட்டதைப் போல, எதிரிகளை மௌனமாக்க அரசாங்கம் பாதாள உலகக் குழுக்களைப் பயன்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கமே பொறுப்பு

இதேவேளை, டேன் பிரியசாத் பாதாள உலகத்தைச் சேர்ந்தவரல்ல என்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவரும் அல்ல எனவும் சுட்டிக்கட்டிய சட்டத்தரணி மனோஜ் கமகே, இது ஒரு பாதாள உலகக் கொலை என்ற கதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.

டேன் பிரியசாத் படுகொலையின் நோக்கத்தை அம்பலப்படுத்திய மொட்டுக் கட்சி!! | Dan Priyasad Murder Slpp Revealed Details

அதன்படி, தற்போதைய அச்சச் சூழலுக்கு அரசாங்கமே பொறுப்பு என்று கூறிய அவர், கொலைக்கு அதிகாரிகள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு பிரியசாத்துக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். 

Previous Post

கதையின் நாயகனாக உயர்ந்த ‘காக்கா முட்டை’ விக்னேஷ்

Next Post

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

Next Post
கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு பூட்டு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures