Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ரன் மெஷின் விராட் கோலி

June 22, 2021
in News, Sports
0

இந்திய கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார்.

விராட்-கோலி 2011, ஜூன் 20-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் முதல் முறையாக களமிறங்கினார்.

அந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்சில் 15 ரன்களுக்கும் அவுட்டானார் விராட் கோலி.

தற்போது நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 3-வது நாளில் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் 10 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளில் விராட் கோலி கடந்து வந்த பாதை:

92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலி 61 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.

மொத்தம் 7,534 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 52.31 ஆக இருக்கிறது.

2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது டெஸ்டில் முதல் அரை சதம் அடித்தார்.

2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

இந்த 10 ஆண்டுகளில் 27 சதங்களை விளாசியுள்ளார். அதில் 14 சதங்கள் இந்தியாவுக்கு வெளியே அடித்தவை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 முறை இரட்டை சதங்களும், 25 அரை சதங்களும் விளாசியுள்ளார்.

2019-ம் ஆண்டில் புனேவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 254 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்சமாகும்.

2016-ம் ஆண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் 1,215 ரன்களை குவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் இந்திய அணியில் அதிகபட்ச சராசரி வைத்திருக்கும் பேட்ஸ்மேன் இவர் மட்டுமே.

2018-ஆம் ஆண்டு ஐசிசியின் சிறந்த வீரர் விருதையும் பெற்றார்.

சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக 2017, 2018, 2019 என தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக 2020-ம் ஆண்டு ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த பேட்ஸ்மேன் என அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு “சர் கேரிபீல்டு சோபர்ஸ்” விருது வழங்கி கவுரவித்தது ஐசிசி.

http://Facebook page / easy 24 news

Previous Post

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! நான்காம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு

Next Post

யோகா நேபாளத்தில் தான் உருவானது – பிரதமர் சர்மா ஒலி சர்ச்சை பேச்சு

Next Post

யோகா நேபாளத்தில் தான் உருவானது - பிரதமர் சர்மா ஒலி சர்ச்சை பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures