ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ஜாமீன் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில், ப.சிதம்பரம், மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அமலாக்கத்துறையும் அவரைக் கைது செய்து, நாளை வரையில் நீதிமன்ற அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
இந்தநிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரத்திற்கு, உச்சநீதிமன்றம், நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இருப்பினும், அமலாக்கத்துறை வழக்கில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, விசாரணை காவலில் உள்ளார்.
உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் வெளியில் வர இயலாத சூழல் உள்ளதால், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில், ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

