Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

டெங்கினால் ஆரோக்கியமான சிறுவர்களை மரணத்திற்கு தள்ளும் அபாயம்

December 25, 2021
in News, Sri Lanka News
0
கடந்த ஏழு மாதமும் 6 நாட்களில்  350 வரை உயர்ந்துள்ள டெங்குநோய் மரணம் !!

டெங்கு நோயானது ஆரோக்கியமான சிறுவர்களைக் கூட மரணம் வரை கொண்டு செல்லக்கூடியளவு அபாயம் மிக்கது. தற்போது டெங்கு நோய் அதிகரித்து வருகின்றமையால் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஹசித லியனாராச்சி தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை (24 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் சுமார் 700 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அந்த எண்ணிக்கை குவைடைந்துள்ளது. தற்போது மாதாந்தம் 100 தொடக்கம் 120 கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால் டெங்கு நிலைமை மாற்றமடைந்துள்ளது. காரணம் கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் டெங்கு நோய்க்கு உள்ளான 250 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இம் மாத்ததில் அந்த எண்ணிக்கை 300 ஐ விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். தற்போது சிறுவர்கள் கொவிட் மற்றும் டெங்கு என இரு நோய்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளனர்.

கொவிட் தொற்றானது தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட , நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள சிறுவர்களை அதிகளவில் பாதிக்கும். ஆனால் டெங்கு நோய் ஆரோக்கியமான சிறுவர்களையும் மரணம் வரை கொண்டு செல்லக்கூடியது.

எனவே சிறுவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இரண்டு தமிழ் பொலிசார் உட்பட 4பேர் மரணம்? | திருக்கோவிலில் என்ன நடந்தது?

Next Post

இலங்கை பெண்ணுக்கு குவைத்தில் மரண தண்டனையா?

Next Post
இலங்கை பெண்ணுக்கு குவைத்தில் மரண தண்டனையா?

இலங்கை பெண்ணுக்கு குவைத்தில் மரண தண்டனையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures