Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டி.டி.வி.தினகரனுக்கு சசிகலா புஷ்பா எம்.பி. ஆதரவு

December 26, 2017
in News, Politics, World
0
டி.டி.வி.தினகரனுக்கு சசிகலா புஷ்பா எம்.பி. ஆதரவு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கிய டி.டி.வி.தினகரன் அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து வேலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செங்குட்டுவன் நேற்றுமுன்தினம் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. அதிருப்தி எம்.பி. சசிகலா புஷ்பா, டி.டி.வி.தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துகளை சசிகலா புஷ்பா எம்.பி. தெரிவித்துக்கொண்டார்.

பின்னர் சசிகலா புஷ்பா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு ஆளும்கட்சி அரசாங்கத்தை எதிர்த்து, பொய் புகார்கள், பொய் வழக்குகளை போட்டு இருந்தாலும் கூட அதை எல்லாம் துணிந்து நின்று மக்களுக்கு நான் இருக்கிறேன். ஜெயலலிதா ஆட்சி தொடரும். நாங்கள் தான் ஜெயலலிதாவின் உண்மையான பிரதிநிதி என்பதை நிருபித்து காட்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை டி.டி.வி.தினகரன் பெற்று இருக்கிறார்.

அவருடைய பணி ஆர்.கே.நகரில் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் தொடர வேண்டும். அவர் நினைத்தபடி உழைப்பதற்கு தயாராக இருக்கிே- றாம் என்பதை தெரிவித்துக் கொண்டு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தேன்.

ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதாவின் தொகுதி. அந்த தொகுதியில் ஆளும்கட்சியை சேர்ந்த முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் முழு அதிகாரத்தை உபயோகித்த போதும் கூட வெற்றி பெற முடியவில்லை என்று சொன்னால், மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள்.

ஆனால் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ? அவர் களை துன்புறுத்துகிறார்கள். அப்படி துன்புறுத்திய போதும், துணிச்சலாக எதிர் த்து நின்று டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா புஷ்பா எம்.பி. தன்னிடம் பேசியது குறித்து டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறும்போதும், ‘ உங்களுடைய துணிச்சல் பிடித்திருக்கிறது, நீங்கள் பெற்ற வெற்றி இமாலய வெற்றி. இதற்காக வாழ்த்து சொல்வதற்காக வந்தேன். உங்களுடன் வருங்காலத்தில் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என்றார்.

Previous Post

எமர்ஜென்சி கால கைதிகளுக்கு தியாகி அந்தஸ்து

Next Post

ஜெ.தீபா வீட்டின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல்

Next Post

ஜெ.தீபா வீட்டின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures