Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஞானசார தேரரின் காவியுடையை அகற்றியமை தவறு

June 18, 2018
in News, Politics, World
0

சங்க சபையின் அனுமதியின்றி தமது சபையைச் சேர்ந்த ஞானசார தேரரின் காவி உடையை அகற்றியமைக்கு, கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்றிதர்ம மகா சங்க சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் நீதியமைச்சுக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அச்சபையின் பிரதான பதிவாளர் பேராசிரியர் கோட்டபிட்டியே ராஹுல தேரரின் கையொப்பத்துடனான கடிதமொன்று நீதியமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட்டபோதும், அவரது துறவற உடையை அகற்றுவது குறித்தான உத்தரவு வழங்கப்படவில்லை எனவும், விருப்பத்திற்கு மாறாக, காவி உடையை அகற்றி, குறிப்பிட்ட காலத்திற்கு அவரை சிறையில் வைப்பதன் மூலம், அவர் துறவறத்தை கடைப்பிடிப்பது தொடர்பான ஒழுக்க ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதுள்ள சட்டத்திற்கு அமைய, பௌத்த தேரர் ஒருவரை அவரது துறவற நிலையிலிருந்து அவரை தாழ்த்தி, துறவற ஆடையை நீக்கும் அதிகாரம், அவருக்குரிய சங்க சபைக்கு உட்பட்டதாகும் எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

சகல பௌத்த அமைப்புக்களையும் சேர்த்து இன்று சாத்தியாக்கிரக போராட்டம்

Next Post

ஐ.தே.மு.யின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அமைச்சர்கள் குறைவு

Next Post

ஐ.தே.மு.யின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அமைச்சர்கள் குறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures