Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜூன் 2 முதல் சபாநாயகர் வசமாகின்றது நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம்!

May 28, 2020
in News, Politics, World
0

நாட்டின் தற்போதைய நிலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு அவசியமில்லை. இந்தநிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்பின் பிரகாரம் ஜுன் மாதம் 2 ஆம் திகதியுடன் காலாவதியாகின்றது. அன்றிலிருந்து நாடாளுமன்றத்தை மீளக் கூட்டும் அதிகாரம் சபாநாயகர் வசமாகின்றது என முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களைக் கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள தனது இல்லத்துக்கு நேற்று அழைத்த அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நீண்ட நேரம் அவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உலக பொருளாதார சுட்டெண்ணுக்கமைவாக இலங்கை படுமோசமானதொரு நிலையிலேயே உள்ளது. எனவேதான் நாட்டின் உண்மை நிலையைத் தெரியப்படுத்துமாறு அரசிடம் கோரினேன்.

பாரியதொரு கடன் பொறிக்குள் சிக்கிவிட்டுள்ளோம். சுற்றுலாத்துறை மற்றும் ஆடை உற்பத்தி என்பவற்றின் மீது மாத்திரம் நம்பிக்கை வைத்து செயற்பட முடியாது. உரிய திட்டமொன்று அவசியம் .

அந்நியச் செலாவணியை அதிகரிக்க புதிய வாய்ப்புகள் தேடப்பட வேண்டும். இதனை மையப்படுத்திய வெளிவிவகாரக் கொள்கையொன்று அவசியமாகவுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு காலாவதியாகாது என்றே சட்டமா அதிபர் கூறுகின்றார். ஆனால், எதிர்வரும் ஜுன் மாதம் 2ஆம் திகதியுடன் அரசமைப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக சபையைக் கலைத்த ஜனாதிபதியின் குறித்த வர்த்தமானி அறிவிப்பு காலாவதியாகிவிடும். ஏனெனில் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் மூன்று மாதங்கள் மாத்திரமே செல்லுபடியாகும். அன்றிலிருந்து நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் சபாநாயகருக்குச் செல்கின்றது.

நாட்டின் தற்போதைய நிலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு அவசியமில்லை. எனவே, ஜூன் 2ஆம் திகதியுடன் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் அதிகாரம் சபாநயகருக்கு உள்ளது என்ற கட்டளையை உயர்நீதிமன்றத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளவே நாம் எதிர்பார்க்கின்றோம் எனத்தெரிவித்தார் .

Previous Post

ஆகஸ்ட் 15 முதல் செப். 15 வரையான காலப்பகுதியில் தேர்தலுக்கு வாய்ப்பு

Next Post

தேர்தல் மனுக்களைத் தள்ளுபடிசெய்யவா?விசாரணைகள் தொடர்ந்து ஒத்திவைப்பு!!

Next Post

தேர்தல் மனுக்களைத் தள்ளுபடிசெய்யவா?விசாரணைகள் தொடர்ந்து ஒத்திவைப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures