Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை மேலும் வீழ்ச்சி | 40 வருடங்களில் அரைவாசியாக குறைந்தது

March 2, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை மேலும் வீழ்ச்சி | 40 வருடங்களில் அரைவாசியாக குறைந்தது

ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த வருடம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜப்பானிய சுகாதார அமைச்சினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 2022 ஆம் ஆண்டில் அந்நாட்டில் 799,728 குழந்தைகள் பிறந்துள்ளன.

இது ஜப்பானில் 1899 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு வருடத்தில் பதிவாகிய மிகக் குறைந்த பிறப்பு எண்ணிக்கையாகும். வருடாந்த பிறப்பு எண்ணிக்கை 8 லட்சத்தைவிட குறைந்தமை இதுவே முதல் தடவையாகும்.

2021 ஆம் ஆண்டைவிட 2022 ஆம் ஆண்டில் பிறப்பு எண்ணிக்கை 5.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.

கடந்த 40 வருடங்களில் ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு அரைவாசியாக குறைவடைந்துள்ளது. 1982 ஆம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்திருந்தன.

ஜப்பானில் கடந்த ஒரு தசாப்தகாலமாக வருடாந்த பிறப்பு எண்ணிக்கையைவிட இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் கடந்த வருடம் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. கடந்த வரும் 1.58 லட்சம் பேர் இறந்திருந்தனர். இது முந்தைய வருடத்தைவிட 8.9 சதவீத அதிகரிப்பாகும்.

தற்போது வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ஊழியர்படை மற்றும் வரியிறுப்பாளர்களின் எண்ணக்கை குறைவடையும் நிலையில், ஓய்வூதியம், சுகாதாரம் ஆகியவற்றுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன.

சிறார்கள் தொடர்பான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 2 மடங்காக அதிகரிக்க அரசாங்கம்; விரும்புவதாக ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

எனினும், பணத்தினால் மாத்திரம் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும் பல சமூக விடயங்களும் இதனுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவ அதிகரிப்பு, குறைந்த இடவசதி, நகரங்களில் சிறுவர் பராமரிப்பு வசதிகள் குறைவு, நகரப்புற தம்பதிகளின் குழந்தை வளர்ப்புக்கு உதவக்கூடிய குடும்ப உறவினர்கள் வெகு தொலைவில் உள்ளமை ஆகியனவும் பிறப்பு வீதம் குறைவடைவதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

மருமகன் தாக்கி மாமியார் பலி – மனைவி கவலைக்கிடம் | வவுனியாவில் பயங்கரம்

Next Post

துருக்கி பூகம்பத்துக்குப் பின் 10,000 நில அதிர்வுகள் பதிவு

Next Post
துருக்கி பூகம்பத்துக்குப் பின் 10,000 நில அதிர்வுகள் பதிவு

துருக்கி பூகம்பத்துக்குப் பின் 10,000 நில அதிர்வுகள் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures