Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவா அல்லது மைத்திரியா

February 22, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் உள் வீட்டு மோதல் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் வைத்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நான் உட்பட எமது கட்சியும் மகிழ்ச்சியில் உள்ளோம்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக தகவல் உள்ளது.

அப்படி நடந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம்.

இப்படியான நிலைமை உருவாகினால், கோத்தபாய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்.

கூட்டணி அமைக்க போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளது.

எனினும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவா அல்லது மைத்திரிபால சிறிசேனவா என்பது தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது எனவும் காவிந்த ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள சாக்கடல்!

Next Post

பட்டதாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் நாட்டின் கடன்களை தீர்க்க முடியும் – பிரதமர்

Next Post

பட்டதாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் நாட்டின் கடன்களை தீர்க்க முடியும் – பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures