ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிலிபைன்ஸுக்கு செல்லவுள்ளார்.
பிலிபைன்ஸ் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இம்மாதம் 15ஆம்திகதி ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி ஒருவர் பிலிபைன்ஸுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.