Sunday, September 21, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்தும் செயற்படும் விசாரணைக்குழு!

June 18, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பையும் மீறி செயற்பட்டு வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது.

அதன்படி அந்தக் குழுவின் ஆறாவது அமர்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய தினம் சாட்சியம் வழங்குவதற்காக காத்தான்குடி பொலிஸில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோருடன், சுபீ முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகளும் முன்னிலையாகவுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இதுவரையில் ஐந்து தடவைகள் கூடியுள்ளது.

இதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.

இவர்கள் வழங்கிய சாட்சியங்கள் மூலம் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளன. இதனையடுத்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டன. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரியிருந்தார். அத்தோடு கடந்த வாரம் இடம்பெறவிருந்த அமைச்சரவைக் கூட்டத்தையும் புறக்கணித்திருந்தார்.

எனினும் சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றதோடு, இன்று அமைச்சரவையும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சர்ச்சைகளுக்குப் பின்னர் சற்று முன்கூடிய அமைச்சரவை!!

Next Post

முஸ்லிம் அமைச்சர்களின் பதவியேற்பு குறித்து மைத்திரியுடன் கலந்துரையாடல்!

Next Post

முஸ்லிம் அமைச்சர்களின் பதவியேற்பு குறித்து மைத்திரியுடன் கலந்துரையாடல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures