Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனா­தி­பதி நாளை விசேட அறிவிப்பு

February 15, 2018
in News, Politics, World
0

அர­சாங்­கத்தின் அடுத்தகட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட அறி­விப்பு ஒன்­றினை நாளை விடுக்­க­வுள்ளார். ஜனா­தி­பதி மாளி­கையில் நாளை ஊடக பிர­தா­னி­களை சந்­திக்­க­வுள்ள நிலையில் இவ் அறி­விப்­பினை வெளி­யி­டுவார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நடை­பெற்று முடிந்த உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­தலின் பினனர் அர­சாங்­கத்தில் பல நெருக்­கடி நிலை­மைகள் எழுந்­துள்­ளன. தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான இரண்டு கட்­சிகள் மத்­தியில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் மற்றும் புரிந்­து­ணர்­வுகள் என்­ப­வற்றின் மத்­தியில் நாளை வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஊடக பிர­தா­னி­களை சந்­திக்­கின்றார். நாளை காலை 8.30 மணிக்கு ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெறும் இந்த சந்­திப்பின் போது அவர் விசேட கார­ணிகள் குறித்து கூறுவார் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய அர­சாங்­க­மாக தாம் இணைந்து பய­ணிப்­பது அல்­லது தனி கட்­சி­யாக செயற்­ப­டு­வது என்ற நிலைப்­பாட்டை எட்டும் வகையில் பிர­தான இரண்டு கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆகி­யன ஆலோ­சித்து வரு­கின்­றன. இந்­நி­லையில் ஜனா­தி­பதி தமை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு பொது எதி­ரணி உறுப்­பி­னர்­களை சந்­தித்து முக்­கிய கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இந்த கலந்­து­ரை­யாடல் ஜனா­தி­பதி இல்­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சியும் கூட்­டணி அமைத்து ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யாக பய­ணிப்­பது குறித்தும் கலந்­து­ரை­யாடி வரு­கின்­றனர். இவ்­வா­றான நிலை­யி­லேயே ஜனா­தி­பதி சில முக்­கிய தீர்­மா­னங்­களை வெளிப்­ப­டுத்­துவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் அர­சியல் கட்­சிகள் மற்றும் கூட்­ட­ணியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற அபேட்­ச­கர்கள் சந்­திப்­பொன்று இன்று கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெ­று­கின்­றது. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைத்து அபேட்சகர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்மையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

அடுத்த வாரம் அமைச்சரவையில் மாற்றம்

Next Post

இந்திய அணி ‘நம்பர்–1

Next Post

இந்திய அணி ‘நம்பர்–1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures