Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சோமாலிய தலைநகரில் கிளைமோர் குண்டுத்தாக்குதல்!!

May 31, 2020
in News, Politics, Sports, World
0

சோமாலிய தலைநகர் மொகாடிஷு அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கிளைமோர் குண்டு தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொகாடிஷுவிலிருந்து வடமேற்கே 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹவா அப்தி பகுதியில் இறுதி சடங்கிற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனமே இவ்வாறு குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

இந்த தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உரிமைகோரவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல், இஸ்லாமிய போராளி குழு அல் ஷபாப் சோமாலியாவின் மத்திய அரசாங்கத்தை கவிழ்க்கவும், இஸ்லாத்தின் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் அதன் சொந்த ஆட்சியை நிறுவவும் போராடி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ரஷ்யாவில் 4 இலட்சத்தை கடந்தது தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை!!

Next Post

ஒரு லட்சம் பக்தர்கள் தயாரிப்பாளர்கள்!!

Next Post

ஒரு லட்சம் பக்தர்கள் தயாரிப்பாளர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures