Wednesday, May 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சென்னையில் 15 நாட்களுக்கு பிறகு உயிரிழப்பு பாதியாக குறைந்தது

June 2, 2021
in News, Sri Lanka News
0
Easy24News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா தினசரி தொற்று சென்னையில் பெருமளவு குறைந்து வந்த போதிலும் உயிரிழப்புகள் மட்டும் குறையாமல் இருந்து வந்தது.

 

சென்னையில் தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி அதிகபட்சமாக 7,564 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதன்பிறகு நோய்தொற்று 7 ஆயிரத்துக்கும் கீழ் பாதிவாகி வந்தது. கடந்த 20-ந்தேதி வரையில் கிட்டத்தட்ட ஒருவார காலம் இந்த பாதிப்பு சீராக நீடித்தது.

கடந்த 21ந்தேதியில் இருந்து நோய் தாக்கம் சென்னையில் படிப்படியாக குறையத்தொடங்கியது. 6 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதன்பிறகு கொரோனா தினசரி பாதிப்பு அதற்கு மேல் கூடாமல் வெகுவாக குறையத்தொடங்கியது. இப்படி படிப்படியாக குறைந்த கொரோனா தொற்று கடந்த 26-ந்தேதி 4 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. இந்த தினசரி பாதிப்பு மறுநாள் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.

கடந்த 6 நாட்களாக தொடர்ந்து சென்னையில் 3 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா தினசரி தொற்று சென்னையில் பெருமளவு குறைந்து வந்த போதிலும் உயிரிழப்புகள் மட்டும் குறையாமல் இருந்து வந்தது. கடந்த 12-ந்தேதியில் இருந்து தொடர்ச்சியாக தினசரி உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன.

இந்த தினசரி பலி எண்ணிக்கை கடந்த 16-ந்தேதி சற்று குறைந்து இருந்தது. அன்று 60 பேர் உயிரிழந்து இருந்தார்கள். ஆனால் அதன்பிறகு தினசரி பலி எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அடங்காமல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

கடந்த 2 வாரங்களாக கொரோனா உயிரிழப்புகள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துக் கொண்டே சென்றது. கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் 85 பேர் உயிரிழந்து இருந்த நிலையில் 21-ந்தேதி தினசரி உயிரிழப்பு 109 ஆக அதிகரித்தது. அதன்பிறகு 4 நாட்கள் 90-க்கும் குறைவானவர்கள் தினமும் உயிரிழந்து வந்தனர்.

கோப்புப்படம்

ஆனால் கடந்த 28-ந் தேதி அதிகபட்சமாக சென்னையில் 107 பேர் பலியானார்கள். கடந்த மாதத்தில் கடைசி 3 நாட்களும் பலி எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. கடந்த 29-ந்தேதி 85 பேரும், 30-ந்தேதி 93 பேரும், 31-ந் தேதி 91 பேரும் உயிரிழந்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு பிறகு தினசரி பலி எண்ணிக்கை சென்னையில் வெகுவாக குறைந்து இருக்கிறது. நேற்று 58 பேர் மட்டுமே உயிரிழந்திருக்கிறார்கள். இதன் மூலம் சென்னையில் உயிரிழப்பு பாதியாக குறைந்து இருக்கிறது. இது பெரிய அளவில் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதன் மூலம் பொது மக்களும், மாநகராட்சி அதிகாரிகளும் நிம்மதி பெரு மூச்சுவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘முழு ஊரடங்குக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

இன்று முதல் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதுமே நோயின் தாக்கம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையில் நோய் தொற்று வேகமாக சரிந்து வந்தது. தற்போது உயிரிழப்பும் குறைந்து இருக்கிறது. வரும் காலங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் குறையும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

சாவகச்சேரியில் சீன மொழி ஆக்கிரமிப்பு

Next Post

ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கும் நயன்தாராவின் 3 படங்கள்

Next Post
நயன்தாராவின் 55வது பட டைட்டில் இது தான்!

ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கும் நயன்தாராவின் 3 படங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

May 14, 2025
தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

May 14, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

May 14, 2025
கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

May 14, 2025

Recent News

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

May 14, 2025
தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

May 14, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

May 14, 2025
கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

May 14, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures