Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சுவிட்சர்லாந்தில் சேதத்தை ஏற்படுத்திய புயல்

January 4, 2018
in News, Politics, World
0

சுவிட்சர்லாந்தில் கடும் சேதத்தை ஏற்படுத்திய புயல் Burglind ஆல் பனிச்சரிவு ஆபத்து அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தை புரட்டிப்போட்ட புயல் Burglind ஆல் பல்வேறு பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வீசிய புயலால் பேர்ன் மாகாணத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

சாலைகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானர். மட்டுமின்றி விமான சேவை நிறுவங்கள் நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு விமான சேவையையும் நிறுத்தியுள்ளது.

சில மாகாணங்களில் மிக முக்கிய தேவை இருந்தால் மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டும் எனவும் பொலிசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

பல பகுதிகளில் வகனங்கள் நிலைகுலைந்து கவிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி சாலை போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல இடங்களில் புயலால் மரங்கள் வேறுடன் சாய்ந்துள்ளதாகவும் அதை அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

புயலின் அச்சுறுத்தலானது இரவு மற்றும் நாளையும் நீடிக்க கூடும் என தெரிய வந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டிசினோ மாகாணத்தில் பெருமழை பெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பனிப்பொழிவு 2000 முதல் 2300 மீற்றர் அளவுக்கு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் பனிச்சரிவுக்கு வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் உரிய எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் தரப்பு அறிவுறுத்தியுள்ளனர்.

Previous Post

ஒரு மாதத்துக்கு பிறகு அந்தமானில் உயிருடன் கரை சேர்ந்த 6 குமரி மீனவர்கள்

Next Post

அரச அலுவலர்: பேஸ்புக்கில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் முறைப்பாடு

Next Post
அரச அலுவலர்: பேஸ்புக்கில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் முறைப்பாடு

அரச அலுவலர்: பேஸ்புக்கில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் முறைப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures