Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுவாமி விபுலானந்தரின் 73ஆவது சிரார்த்த தினம்

July 19, 2020
in News, Politics, World
0

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 73ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அன்னாரது சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும், மட்டக்களப்பு திருநீற்றுப் பூங்காவில் அமைந்துள்ள சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை 19.07.2020ம் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற நிகழ்வானது, சுவாமி விபுலானந்தர் சிவானந்தா நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில், கல்லடி இராமகிருஷ்ணமிஷன் சுவாமி தட்சயானந்தா, சுவாமி நீலமாதவானந்தா போன்றோர் கலந்துகொண்டு விஷேட பூசைகள் நடாத்தி அஞ்சலி செலுத்தினர்.

இதில் நூற்றாண்டு சபையின் தலைவர் கே. பாஸ்கரன் மற்றும் சபையின் உறுப்பினர்கள், கல்விமான்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவிகளால் சுவாமி விபுலானந்தரின் ‘வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ’ எனும் பாடலும் பாடப்பட்டது.

தொடர்ந்து மட்டக்களப்பு திருநீற்றுப் பூங்காவில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி. சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

Previous Post

சட்டத்துக்குப் புறம்பான சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய பொலிஸ் பிரிவு!!

Next Post

புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை

Next Post

புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures