Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சுனாமி பீதியினால், மக்கள் ஓட்டம் – மொரட்டுவையில் விசமிகள் இழிச்செயல்

December 6, 2017
in News
0

விசமிகள் சிலர் அண்மைக்காலமாக சுனாமி பீதியை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடுவதால் மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு பிரதான வீதிகளில் கூடும் நிலை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, மொரட்டுவைப் பகுதியில், நேற்று சுனாமி வதந்தி பரப்பப்பட்டதால், கரையோரங்களில் வாழ்ந்த மக்கள் நகர்புறங்களுக்குப் படையெடுத்துள்ளனர். இதனால், மொரட்டுவையில் நேற்று( 05) பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இவ்வாறான அனர்த்தம் ஏற்படவில்லை என்றும் சுனாமி வதந்தி பரப்புவர்களால் தாமும் அண்மைக்காலமாக பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சுனாமி வதந்தி பரப்பப்பட்டதால் மக்கள் பிரதான நகரங்களுக்கு அணிதிரண்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

குறிப்பாக திருகோணமலை பகுதியிலுள்ள கிணறுகளில் நீர் உள்வாங்கப்பட்டதால் மக்கள் சுனாமி அனர்த்தம் ஏற்படப்போவதாக நினைத்து, அச்சத்தில் கரையோர பகுதிகளிலிருந்து வெளியேறினர்.

முல்லைதீவு மாவட்டத்திலும் இவ்வாறு வதந்தி பரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பில் கரைவலை தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் வலையில் இலட்சக்கணக்கான கடல்பாம்புகள் சிக்கியுள்ளன.

கடந்த 2004ஆம் ஆண்டு, இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டதாகவும் எனவே, சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்காகவே, தற்போது இவ்வாறான அறிகுறிகள் தென்படுவதாகவும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Previous Post

காலியில் முஸ்லிம் வர்த்தகரின் கடையில் தீ, ஆறுதலாக வந்த தீயணைப்பு படை

Next Post

காற்றழுத்தம் நெருங்கியுள்ள நிலையிலும், சூறாவளி ஆபத்து இல்லை

Next Post
காற்றழுத்தம் நெருங்கியுள்ள நிலையிலும், சூறாவளி ஆபத்து இல்லை

காற்றழுத்தம் நெருங்கியுள்ள நிலையிலும், சூறாவளி ஆபத்து இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures